நிபந்தனையின்றி நிரந்தரமாக

. . . உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய். . . 
 லூக்கா 13:12

நமக்கு பலமும் பலவீனமும் இரத்தமும் சதையும் போல. 
ஆனால் நாம் சிலவேளைகளில் பலவீனங்களால் கட்டப்படுகிறோம். 
அது என்ன என்பது நமக்கும் இறைவனுக்குமானது, 
அவரே கட்டுகளை நிரந்தரமாக உடைப்பவர்.

இறைமகன் இயேசு இந்த பூவுலகில் மனுமகனாய் வாழ்ந்தக் 
காலத்தில் அற்புதங்களையும், அடையாளங்களையும் நடத்தினார். 
என்றும் மாறாத அவரிடம் நமது பலவீனங்களை விளம்புவோம்;
நிபந்தனையின்றி நிரந்தரமாக விடுதலையாக்கப்படுவோம்.

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED