எந்த ஊழியக்காரனும் இரண்டு
எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது,. . .
தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய
உங்களாலே கூடாது என்றார்.
லூக்கா 16:13
ஒரு தொழிலாளிக்கு ஒரே முதலாளி.
முதலாளி இருவரானால், வேலைக்காரன்
வேஷம்போட வேண்டிய நிர்பந்தம்,
அதுவே அவனைக்கொல்லும் தீப்பந்தம்.
ஆளைக்கண்டால் கும்பிடுவது,
மறைந்தால் மட்டம்தட்டுவது அறவே கூடாது.
"'நல்லவனுக்கு நல்லவன்; கெட்டவனுக்கு கெட்டவன்'
என்பதெல்லாம் கறிக்குதவாத காகித சுரக்காய்."
ஒன்று நன்மையாக அல்லது நன்மைக்கு புறம்பாக வாழனும்.
எஜமானாம் இறைவனின் நல்வழியில் நடப்போம்,
நிறைவாழ்வு வாழ்வோம்.
Amen
ReplyDeleteAmen
ReplyDelete