எலிப்பந்தயம்

இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, 
அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள். 
யோவான் 4:3

ஒருவேளை இயேசு பெருமான்  ஞானஸ்நானம் கொடுத்திருந்தால்,
மக்கள் குவிந்திருப்பார்கள்!
ஏற்கனவே, அத்திருப்பணியைச் செய்து வரும் 
திருமுழுக்கு யோவானின் ஊழியம் தடைப்பட்டிருக்கும்.

"அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்" எனும் போது , 
இறைப்பணியானது ஊழியர்களுக்குள்ளே 
பகிர்ந்துகொள்வதும், பங்குகொள்வதுமாகும். 
உற்சாகத்தோடு பங்குகொள்வோம், 
போட்டியில்லா இடங்களில் இறைப்பணிசெய்வோம்.

Comments