இதயத்திற்கு இனியவ(ள்)ன்

தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; 
எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான்
 என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார். 
அப். 13:22

ஆண்டவரின் இதயத்திற்கு ஏற்றபடி நடந்த
 ஆடுமேய்க்கும் தாவீதை ஆண்டவர் நாட்டிற்கே அரசனாக்கினார். 
தேவனுடைய சித்தத்தின்படிதான் 'எல்லாம் செய்வான்' 
என்று சாட்சியும் கொடுத்தார். 
நம்மையும் பார்த்து அவ்வாறே சொல்ல ஆவலாய் உள்ளார்.

பச்சையைக் கண்டபொழுதெல்லாம் இச்சைகொள்ளும்
 இதயங்களுக்கு இடையே, இறைவன் விரும்பும் இதயமாக 
நமது இதயம் இருக்கவேண்டுவோம். 
அவரின் இதயத்திற்கு ஏற்றபடி நற்சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்வோம்.

Comments