ஓயாத கடல் அலை?

நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; 
. . . யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் 
திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். 
அப். 14:15

பூமியில் வாழும் போது எல்லாவிதத்திலும் 
சோதிக்கப்பட்டுப் பாடுபட்ட இறைமகன் இயேசு, 
ஒருபோதும் பிரச்னையை நோக்கவில்லை; 
எவ்வேளையும் தீர்வு தரும் தேவனையே நோக்கினார்.
அவரது பாதையைப் பற்றி நடப்போம்.  

சமீப காலமாக நாமே நம்முடன் செய்யும் யுத்தம் அதிகரிக்கிறது.
மனப்போராட்டம்  யாவருக்குமான  பொதுச்சொத்து. 
ஆனால், நாம் அதிலே மனமடிந்து போவதுதான் மடைமை. 
எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு; அது இறைவனிடமே உண்டு.

Comments