மனதிலே கலக்கமா?

நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி
 ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை. 
அப். 18:10

திருவாழ்க்கை வாழ்ந்த பவுலடியார், 
திருவசனத்தைப் பறைசாற்றிய பொழுது
 கர்த்தர் அவரிடம்  'பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், 
தீங்கு ஏதும் தீண்டுவதில்லை' என திருவார்த்தைகள் மொழிந்தார்.

திருரத்தம் சிந்திய இறைமகன் நம் அனைவருக்குமானவரே! 
அன்பே உருவாகிய அவர், நம்முடனும் இருக்கிறார்; 
நமக்கு எத்தீங்கும் அணுக விடார். 
வாக்குத்தந்தவர் உண்மையுள்ளவர்; என்றும் வாக்குமாறாதவர்.

Comments