கஷ்டங்களிலும் களிகூருங்கள்

உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், 
பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று. . . 
உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். 
ரோமர் 5:3-4

உபத்திரவம் இல்லாத வாழ்க்கை 
அநேகருடைய ஆவலாயிருக்கிறது. 
ஆனால் குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை 
உபத்திரவமே ஊடு பயிராகிறது. 
அப்பயிர்களே பின்பு பாதைகளாகிறது; 
சிலருக்கு பாலையாகிறது.

உபத்திரவங்கள் வாழ்வின் பொறுமையையும், 
தேர்வுகளை கடக்கும் திறனையும், 
நம்பிக்கையின் நங்கூரத்தையும் நமக்கு உண்டாக்குகிறது.
 இவ்வாறு வாழ்வின் பலபடிநிலைகளில் கற்பிக்கும் 
உபத்திரவங்களையும் மேன்மையாக எண்ணுவோம்.

Comments