கோபத்தில் கொதிக்கிறீர்களா?

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன்
 அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; 
எபே.4:26

மாற்றம் ஒன்றே மாறாதது !. மனிதனின் மனநிலை மட்டும் 
இதற்கு விதிவிலக்கா என்ன ?  மாறாதிருக்க நாம் என்ன மரமா, செடியா ? 
அழுகை, மகிழ்ச்சி, களிப்பு, வெறுப்பு, சோகம், கோபம்
 இதெல்லாம் நம்முடனே பயணிக்கும் சக பயணி.

கோபப்படுவது தவறல்ல! "ஆத்திரத்தில கத்திட்டேன் , கோபத்தில குத்திட்டேன்"
என்று, கோபம் நமக்கு கோளாறு கொடுப்பதாகி விடக்கூடாது. 
ஆதலால், சூரியன் மறையும் முன்பாக 
நமது கோபம் நம்மைவிட்டு முற்றிலும் மறைந்திட வேண்டும்.

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED