குன்றின்மேலிட்ட விளக்காய். . .

நாம் நமக்கே பிரியமாய் நடவாமல்,. . . 
நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான
 நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.
ரோமர் 15:1-2

'நெடுகவே நற்செய்தி அறிவியுங்கள், தேவைப்பட்டால் மட்டும் 
வார்த்தைகளை பயன்படுத்துங்கள்' என்றோர் கூற்றுண்டு. 
அதெப்படியெனில், நம் நற்செயல்களே பிறர்க்கு நற்செய்தி. 
பிறர் இறைபக்தியில் வளரும்படி நம் செயல்கள் இருக்கட்டும்.

பிறரை பிரியப்படுத்துவது என்பது, பிறரோடு ஒத்து ஊதுவது அல்ல; 
நம் செயல்களால் பிறர் இறைவனோடு ஒத்து வாழ்வதாகும். 
பிறருக்காகவே வந்து, வாழ்ந்து, மரித்த இறைமகனின் 
அடிச்சுவட்டிலே நாமும் செயல்படுவோம்.


Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED