போதுமென்ற மனமே

உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் 
அது போதுமென்றிருக்கக்கடவோம்.
I தீமோத்தேயு 6:8

நம்முடைய தேவைகளை எழுத ஆரம்பித்தால் நூல் போதாது; 
எழுதி தீர்க்க நாள் போதாது. நமது தேவைகள்
தீர்ந்துவிடுவதால் மட்டும் மனம் நிறைவை அடையாது. 
எதிலும் போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து ! 

வறுமையின் அவலங்களும், பட்டினி சாவுகளும் எங்கும் எதிரொலிக்கும்
இச்சூழலில் நமக்கு இன்று உணவும், உடைகளும் கொடுக்கப்பட்டிருப்பதற்காக 
ஆண்டவருக்கு நன்றி சொல்வோம். இருப்பதிற்காக அகமகிழ்வோம்,
இதுவும் இல்லாதோருக்கு இயன்றதை செய்வோம்.



Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED