விடாமுயற்சி

நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு. 
II தீமோத்தேயு 3:14

புதுவருடம் துவங்கும் போதெல்லாம் 
உறுதிமொழிகளும், தீர்மானங்களும் குறைவுபடாது. 
அதை நடைமுறைப்படுத்துவதில் தான் நமக்கு தகராறு. 
மனமுவந்து தான் முடிவெடுக்கிறோம்; 
சடிதியாய் இடர்வரின் மனமடிந்து சபதத்தையே கைவிடுகிறோம்.

இறைவார்த்தையை வாசிக்கிறோம்,கேட்கிறோம். 
கேட்டபொழுதெல்லாம் நம் வாழ்க்கை மாற்றத்திற்காக 
முடிவெடுக்கிறோம், நிலைநிற்க முடியாமல் தவிக்கிறோம். 
ஆனாலும், ஜெபித்து தொடர்ந்து முயற்சி செய்வோம். 
தேவையான பெலத்தை ஆண்டவர் அருள்வாராக.

புகைப்பட ஆதாரம் : விடாமுயற்சி (FB)

Comments

  1. Kuthirayo yutha nalukku aayathapadum jeyamo kartharal varum amen🙏

    ReplyDelete
    Replies
    1. Aayathamaagum naatkal ellam, aandavrin thunaiyodu aayathamaaguvom. Amen

      Delete
  2. என் மகள் ஜெம்ஸ் மிட்டாய் நேற்று கேட்டாள், வேளை முடிய சற்று தாமதம் ஆனதால் கடைகள் அடைக்கப்பட்டுவிட்டது, ஆயினும் எப்படியாவது வாங்கி கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லி சுற்றி திரிந்தேன், கடைகள் எங்குமே இல்லை. மனதில் வருத்தம். இன்று காலை கடை எப்பொழுது திறக்கும் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன்,... ஏன் இவ்வளவு பெரிய விளக்கம் என்று தானே யோசிக்கிறீர்கள். இதில் பார்க்கும்போது, மகள் மீது கொண்டுள்ள அன்பு, வைராக்கியம் இதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உதாரணமாக, ஏசாயாவிலே, யாரை நான் அனுப்புவேன், யார் என் காரியமாய் போவார்? இதேபோல் அநேக கட்டளைகளும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது, நம்முடைய அன்பும், வைராக்கியமும் எங்கே உள்ளது?

    ReplyDelete
    Replies
    1. அன்பு நிறை ஆண்டவரின் அன்பைப்பற்றி ஆகச்சிறந்த பதிவு. சிறந்த தற்பரிசோதனை கேள்வி அண்ணா

      Delete
  3. ஆமென்!

    கற்பது மட்டும் பெரிதன்றோ - நிச்சயித்து
    கற்றதில் நிற்பதும் அவசியமன்றோ

    உறுதி ஏற்பதில் நம்மிடம் குறையுள்ளதா என்ன
    இறுதி வரை அதில் நிற்பதில் தானே தகராறு

    மனமுவந்து தான் உறுதியேற்கிறோம் - பின் ஏனோ
    மனமடிந்து அதனை கைவிடுகிறோம்

    இறுதி வரை நிற்பவன் எவனோ - அவனே
    உறுதியாக இறையடி சேர்வான்!

    சிந்திப்பீர் மானுடமே! சந்திப்பீர் இறைவனையே!!

    இறையாசீர் கிட்டட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. சிறந்த கருத்து

      Delete
    2. மிகச்சிறந்த பதிவு. இறையாசீர் உங்களை நடத்தட்டும்.

      Delete
  4. சிறந்த கருத்து

    ReplyDelete
    Replies
    1. இறையாசீர் உங்களை நடத்தட்டும்.

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED