நாமே வெறுப்பேத்தலாமா?

கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், 
அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.
எபிரெயர் 4:2

சிலரது விசுவாசம் வாழைக்கு கன்றாக இருக்கும்;
 சிலருக்கோ ஆலுக்கு வேராக இருக்கும். 
விசுவாசத்தின் அளவில் எல்லாருக்கும் வேறுபாடுண்டு. 
ஆனால், அவிசுவாசமோ நஞ்சு கலந்த களை; 
பயிரை காவு வாங்கும் ஒட்டுண்ணி. 
பாவத்திலும் கொடிய பாவம், "அவிசுவாசம்". 

"தேவனால் முடியும்!" என்று அடித்துச்சொல்வதற்கு பதிலாக, 
"தேவனால் முடியுமா?" என அடித்துக்கொள்கிறோம் (*#)
ஆண்டவரை "அதிகம் வெறுப்பூட்டுவது" நமது அவிசுவாசமே.
எனவே, நமது அவிசுவாசம் நீங்க மன்றாடுவோம்; 
ஆண்டவரை விசுவாசித்து அவருக்கு பிரியமான பிள்ளைகளாவோம்.

(*#) சகோதரர் R. ஸ்டான்லி -யின் "கரோனா கதறல்". 




Comments

  1. Nampikai ulla manushan paakiyavaan amen🙏

    ReplyDelete
    Replies
    1. இறைநம்பிக்கையிலும்,இறைவிசுவாசத்திலும் நாளும் நடப்போம். ஆமென்

      Delete
  2. உங்களது ஊக்கப்படுத்துதலுக்கு நன்றி. இறையாசீர் உரித்தாகுக

    ReplyDelete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED