திட்டத்திற்காக திருத்துதல்

என் பிள்ளையே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே,
 அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
எபிரெயர் 12:5

போதனையின் போது விழும் ஒவ்வொரு அடியும், 
நம்மை ஒரு படி மேலே உயர்த்தும். 
அடிப்பது ஆசானாக இருந்தாலும், 
ஈசனாக இருந்தாலும் இது தான் தேற்றம். 
அடி விழுவது நாம் அயர்ந்து போவதற்காக அல்ல, 
உயர்ந்து நிற்பதற்காக. 

இறைவன் நம்மை எந்நிலையிலும் சேர்த்துக்கொள்வார்; 
ஆனால், அப்படியே வளர்க்காமல், சீர்படுத்துவதற்காகத் 
தட்டலாம், உடைக்கலாம், நொறுக்கலாம், உருக்கலாம். . 
சோர்ந்து போகவேண்டாம். இவையெல்லாம்,
 திரும்ப நம்மை புதுப்பித்து ஜொலிக்கபண்ணவே!

புகைப்பட ஆதாரம் : Garden Eco

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED