இறையன்பு

வசனத்தினாலும் நாவினாலுமல்ல, 
கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
I யோவான் 3 :18

எங்கும் இன்று இறைவசனத்தை போதிக்க ஆட்கள் அதிகம்; 
ஆனால் வேதவசனத்தின்படி நடக்க ஆட்கள் குறைவு. 
உதவி என்று கேட்டுவருவோருக்கு சில வசனங்களை சொல்லி 
ஜெபித்து அனுப்பிவிடுவது தீர்வாகுமா? 
இறைவாழ்வு என்பதே கொடுப்பதும், வாழ்ந்து காட்டுவதும் தானே.

இறைவன் நம்மேல் அன்பாயிருக்கிறார்; நாம் அவர் மீது அன்பாக 
இருக்கிறோமெனில் இறைஅன்பு நம்மூலமாக வெளிப்படுவதே இதற்கு சான்று. 
வெறுமனே பேச்சினால் அல்ல; நமது செயல்களினாலும், உண்மையான 
நடத்தையினாலும் தேவஅன்பை நம்மூலமாக பிறர் உணரட்டும்.

புகைப்படச்சான்று : Google Images



Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED