மனமார்ந்த மன்றாட்டு

உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் 
சொல்லுகிறது என்னவென்றால், 
உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; 
உன் கண்ணீரைக் கண்டேன்;. . . 
ஏசாயா 38:5

போதித்து போதித்தே ஒருவன் அழிந்து போகலாம்; 
ஆனால், ஜெபித்து ஜெபித்து ஒருவனும் வீணாய்ப்போனதாக
 வார்த்தையும் இல்லை, வரலாறும் இல்லை. நாம் நமது ஜெபத்திலே 
"யாவற்றையும்" தேவனிடத்தில் தெரியப்படுத்தலாம்.

இதயப்பூர்வமாக செய்யும் நமது வேண்டுதல்கள், 
விண்ணப்பங்கள் "எல்லாம்" தேவசமூகத்திலே சென்றுசேரும். 
தேவன் அவற்றை கேட்பதோடல்லாமல், 
நொடியும் மாறாமல் அதினதின் காலத்தில் பதில்செய்கிறவர்.
 "நம்மைக் கண்ணின் இமைபோலக் காப்பவர்,
நம் கண்ணீரை காணமாட்டாரோ?"

புகைப்படச்சான்று: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED