ஏங்கும் செடியே மழையால் ஓங்கும்

தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், 
வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்.
ஏசாயா 44:3

ஒரு செடியை ஆயிரம் பராமரித்தாலும், மழைத்தண்ணீருக்கே ஏங்கும். 
மழைத்தண்ணீர் பட்டவுடன் செடிக்கு வரும் சிலிர்ப்பும், செழிப்பும், 
நாம் அளவில்லா உரம்போட்டாலும், அனுதினமும் ஊட்டிவளர்த்தாலும்
 வராது என்பது நிஜமே. ஏங்கும் செடியே மழையால் ஓங்கும்.

வாழ ஆயிரம் வழிவாய்ப்புகள் இருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் 
நம் வாழ்வில் வரும்பொழுதே நமது வாழ்வு நிறைவாகும். 
தாகமுள்ளவனுக்குத் தண்ணீர் ஊற்றப்படும்; 
ஆனாலும், கேட்கிறவனே பெற்றுக்கொள்ளுகிறான். 
தாகத்தோடு அவரிடத்தில் கேட்ப்போம், 
துணையாக அவரையே கேட்போம்.




Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED