துணை யாரோ?

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, 
உன்னைக் கைவிடுவதுமில்லை என்று 
அவர் சொல்லியிருக்கிறாரே. 
எபிரெயர் 13:5

இறுக்கமான தளர்வுகள் சிறையாகும் சிந்தனைகளுக்கு தீர்வாகுமா? 
வலைத்தள வாழ்வால் குடும்பத்தோடு இருந்தாலும் 
மனம் தனித்தே இயங்குகிறதா? 
மனிதன் நமக்கு என்ன செய்யமுடியும் 
என்பதை நம் மனம் இப்போது தான் புரிந்திருக்கும். 

இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை 
என்று நம் அன்பு தெய்வம் அருள் மொழிந்திருக்கிறாரே, 
இந்த அருள்நாதரின் வாக்கை நம்பியே நாளும் நடை போடுவோம்.

    புகைப்பட சான்று : Wallpaperup

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED