வத்திக்குச்சி

நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது.
யாக்கோபு 3:8

உள்ளத்தின் நிறைவைத்தான் வாய் பேசும். 
வாயின் வார்த்தைகள் உறவுகளை
 கட்டியும் எழுப்பும்; வெட்டியும் வீழ்த்தும். 
நாவு சிறிய உறுப்பாயிருந்தும் வலிமை மிகுந்தது. 
கொட்டிய முத்துக்களை அள்ளிவிடலாம்; 
சொற்களையோ முடியாதே!

சிறிய நெருப்புதான் பெரிய காட்டை கொளுத்திவிடும். 
சிறிய சொற்கள் வீரிய விளைவை ஏற்படுத்தும். 
சொற்களின் மிகுதியால் பாவமில்லாமல் போகாது.
 "நம் நாவை அடக்க நம்மால் இயலாது !". 
ஆனால், ஆண்டவரது உதவியை நாடினால் அனைத்தும் சாத்தியமே!

புகைப்பட ஆதாரம் : Investors Hub

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED