தகுந்த சன்மானம்

எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ 
அவனுடைய பற்களே கூசிப்போகும்.
எரேமியா 31 :30

நான் இன்று அனுபவிக்கும் பாடெல்லாம் என் முன்னோர்கள் செய்ததின் 
விளைவு தான் என்று சொல்வதும், ஜென்ம பாவம், பூர்வ சாபம் 
இதையெல்லாம் நம்புவதும் சரியா? 
'திராட்சைக்காயை என் தாத்தா சாப்பிட்டாரு, 
என் பல் எல்லாம் கூசுது' என்று சொல்லமுடியுமா?

நம் வினையின் முடிவு தவறாக வந்தால் சூழ்நிலைகள் மீதோ, சுற்றியிருப்போர்
 மீதோ சுமத்திவிடுகிறோம். நம் வாழ்க்கைக்கு நாம் தானே பொறுப்பு? 
'இறுதித்தீர்ப்பு நாளில் பிறரை சாக்குப்போக்கு சொல்லமுடியுமா? முடியாது!' 
அந்நாளில், "நம் முன்னோர்களின் செயல்கள் அல்ல, 
நமது செயல்களே நம்மை தீர்ப்பிடும்".

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED