சாமியால் சாத்தியம் !

நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; 
என்னாலே செய்யக்கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?
எரேமியா 32:27

நமது தேவனாகிய கர்த்தர் ரத்தமும் சதையும் கலந்த உயிர்கள் 
எல்லாருக்கும் உரிமை உள்ளவராகவே இருக்கிறார். 
எங்கும், எதிலும், எவருக்கும் பாகுபாடில்லாமல் அனைவரையும் அரவணைத்து
 வழிநடத்த ஆண்டவர் உண்மையுள்ளவராகவே இருக்கிறார்.

நமது தன்னம்பிக்கை குறையலாம்; தகுதியின்மை கூடலாம்; வழிகளும் 
மூடலாம். ஆனாலும், ஆண்டவரால் ஆகாத அதிசயமும் இல்லை, 
அற்புதமும் இல்லை என்பதே நிஜம். 
எனவே, 'ஆழியே சூழ்ந்தாலும், இறைவன் நம்மை அதிசயமாக நடத்திடுவார்' 
என்ற இறைநம்பிக்கை மட்டுமே நமக்கு நிலைக்கவேண்டும்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED