சிறையிலிருந்து சிங்காசனம்

. .அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். . .
எரேமியா 32:44

தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் இயல்பு நிலைக்கு 
நம்மால் திரும்பமுடியவில்லை. நம்மை அச்சுறுத்த சம்மட்டி எடுத்த 
கொரோனா வைரஸ் பரவலால் சகாக்களையும் சந்தேகக் கண்ணோடுதான் 
பார்க்கும் நிலை. இந்த சிறைவாசம் எப்போது மாறப்போகிறது?

வீட்டிற்குள்ளே இருந்தும், அடிமைகளாகவே நாம் விற்கப்பட்டோம். 
அடிமைத்தனம் ஆளுக்கு ஆள் மாறுபடுமே தவிர, அது மாறிலி தான். 
"விற்கப்பட்ட நாம் மீட்கப்படுவது எப்போது? 
நமது சிறையிருப்பு மாறும்போது மட்டும்!" 
எனவே, நமது சிறையிருப்பைத் திருப்பி, 
நம்மை சீர்படுத்தும் கர்த்தரிடம் திரும்புவோம்.

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED