ஞானத்தின் ஊற்று

ஞானமும் வல்லமையும் தேவனுக்கே உரியது. . . . 
அவரே ஞானிகளுக்கு ஞானத்தையும், 
அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.
தானியேல் 2:20-21

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதே ஞானத்தின் ஆரம்பம். 
ஏனெனில், ஆண்டவரே ஞானத்தின் ஊற்று.  ஊற்றிடமிருந்தே 
நம் அறிவும், ஞானமும் சுரந்துவரும். 
மனிதராகிய நம்மிடம் இருப்பதெல்லாம்  
அவர் நமக்கு கிருபையாக அருளிய ஈவு.

நாம் அற்பமாக எண்ணும் எறும்பு தான், அதிகமான ஞானத்தை பெற்றிருக்கிறது.
 ஆகவே, நாம் அசட்டை பண்ணப்படுவதைப்பற்றி கவலை வேண்டாம். 
நாம் அனைத்திலும் குறைவானவர்கள்; 
ஆண்டவரோ முற்றிலும் நிறைவானவர். 
எனவே, நம் குறையெல்லாம் நிறைவாகிட 
ஊற்றின் உறைவிடத்திடம் வேண்டிடுவோம்.

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED