தற்பரிசோதனை

இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; 
கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
ஏசாயா 59:1

இரட்சகரும் மீட்பருமாகிய நம் கர்த்தர், 
ஒருவருக்கேனும் இரட்சிப்பு இல்லை என்று விரட்டுவதில்லை; 
அதுபோல, தம்மை நோக்கி உண்மையாய் கூப்பிடுவோரின் 
சத்தத்திற்கு தமது செவியை மூடுவதுமில்லை. 
ஆனாலும், நமக்கு இன்னும் தடுமாற்றம் தான்.

நமது வார்த்தைகளும், நினைவுகளும், 
செயல்களும் ஆண்டவருக்குப் பிரியமாக
 இருக்கிறதா என நம்மை நாமே சுயமாய் சோதித்து, 
மனத்தாழ்மையாய் ஆண்டவரோடு ஒப்புரவாவோம். 
நாம் மந்தமாகிடாதபடி நாளெல்லாம் இரட்சிப்பின் அனுபவத்தை 
புதுப்பித்துக்கொள்ள ஆண்டவர் தாமே அருள்புரிவாராக!

புகைப்படச்சான்று: 123RF.com

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED