எரிந்து பிரகாசி

எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, 
கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
ஏசாயா 60:1

வெளியே பார்க்க செழிப்பாகவும், உள்ளே சலிப்பாகவும் 
இருப்போர் நம்மை சுற்றி அதிகம். ஏன், நாமே சிலவேளை இப்படித்தான்! 
"அந்த வெறுமையையும் வெற்றிடத்தையும் நீக்கும் ஒரே வழி 
இயேசு கிறிஸ்து தான்" என்று நாம் அறிந்ததை 
உலகிற்கு காட்ட நாம் எழும்பி பிரகாசிக்க வேண்டும்.

எழும்பி பிரகாசிக்க விரும்பும் நாம், எண்ணையில் எரியும் தீபமாக,
 மெழுகும் திரியுமாக எரிந்தும் பிரகாசிக்க விரும்ப வேண்டும்.
கர்த்தரின் மகிமை நம்மேல் உதிப்பதின் நோக்கமே,
 நம் மூலம் பிறரது வாழ்விலும், வழியிலும், விழியிலும், ஒளியடையவே!!

புகைப்படச்சான்று: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED