பொக்கிஷங்கள்

சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; 
சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.
நீதிமொழிகள் 27:6

நம்மீது அக்கறை நிறைந்த அன்பானவர்கள், 
நமது நலனுக்காக சிலவேளை நம்மை கடிந்துகொள்வார்கள். 
கடிந்துகொள்ளும் காரணத்திற்காக, 
அன்புகொண்டவர்களை ஒருபோதும் வெறுக்கக்கூடாது. 
 "இப்படி சொல்லிட்டாங்களே" என்று யோசிப்பதை விடுத்து, 
"சொல்லிக்கொடுப்பதை கற்றுக்கொள்வோம்".

வெளிப்படையான விமர்சனமானது 
மறைத்து வைக்கப்படும் அன்பைவிடச் சிறந்தது. 
ஏனென்றால்,அவர்கள் வார்த்தைகள் கானல் நீர் அல்ல; 
உள்ளார்ந்த ஊற்றுநீர், அது காரணம் நிறைந்தது. 
இப்படி நம்மை திருத்தும் நல்ல நண்பர்கள் நமது சொத்துக்கள். 
அவர்களை கனப்படுத்துவோம்.

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED