இயேசு அழைக்கிறார்

இயேசுவோ:
 சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; 
அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; 
பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,
 அவர்கள்மேல் கைகளை வைத்து, 
பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போனார்.
மத்தேயு 19:14-15

ஆண்டவரை நாடி வந்த சிறுவர்கள் தடுக்கப்படுகிறார்கள். 
ஆண்டவரோ, சிறுபிள்ளைகளுக்கு வழிவிட வாய்மொழிகிறார், 
பரலோகராஜ்யம் அத்தகையோருடையது என்று அருள்மொழிகிறார். 
தடுக்கப்பட்டவர்கள் தலைமீது கைகளை வைத்து ஆசீர்வதிக்கிறார்.

தாழ்மையான மனதிற்கும், கீழ்ப்படியும் குணத்திற்கும், 
மன்னிப்பதற்கும், மறப்பதற்கும், நன்மைக்கும், உண்மைக்கும், 
சிறுபிள்ளைகள் நமக்கு மாதிரிகள்; 
சிறுபிள்ளைகளைப் போல (மனம்)மாறுவோம். 
நம்மை என்றும் விரும்பும் ஆண்டவரை நாமும் விரும்புவோம், 
அவரது விருப்பப்படியே நாளும் வாழ்வோம்.

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED