வழிகாட்டி

மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால்
 நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த 
நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, 
அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன்.
ஓசியா 11:4

ஆண்டவர் எல்லா மனிதரையும் கையைப்பிடித்து நடக்கப் பழக்குகிறார்; 
விழுந்தால் தூக்கிவிடுகிறார்; காயப்பட்டால் குணமாக்குகிறார்; 
அன்பை கயிறாக திரித்து, கட்டி இழுத்து சேர்த்துக் கொள்கிறார்; 
அழுத்தும் பாரங்களை அகற்றி, ஆகாரமும் கொடுக்கிறார்.

ஆண்டவரே இப்படி சகலத்தையும் செய்யும் போது,
 நாம் செய்ய வேண்டியது என்ன? 
ஆண்டவர் மட்டுமே இவை அனைத்தையும் செய்வார் என்று நம்புவதும், 
இந்த சத்தியத்தை அறியாத ஆயிரம் ஆயிரமானோருக்கு அறிவிப்பதும்,
 ஆண்டவர் ஒருவரே வழி என அறிந்த நாமே முன்சென்று வழிகாட்டுவதுமே சிறந்தது.



Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED