ருசியா இருக்கா?

நல்லவனின் வார்த்தைகள் வாழ்வைச் சிறப்புள்ளதாக்கும்.
நீதிமொழிகள் 10:11

நல்லவனின் வார்த்தைகள் தனது வாழ்வையும், 
தன்னைச் சுற்றியிருப்போர் வாழ்வையும் சிறப்புள்ளதாக்கும். 
அன்பின் மொழிகளும், அறிவின் ஆலோசனைகளும், 
ஆக்கமான வழிகாட்டுதலும் நல்ல எண்ணமுடையோரிடமிருந்தே கிடைக்கும்.

ஒவ்வொரு வார்த்தைகளை பேசும் போதும், 
அதை நாமே முதலில் ருசிபார்க்கவேண்டும். 
கூடுமானவரையில் கனிவான வார்த்தைகளை பயன்படுத்துவோம். 
தேவையுள்ளோருக்கு நமது வார்த்தைகளே வைத்தியம் ஆகட்டும், 
அனைவருக்கும் இறையாசீர் கிட்டட்டும்!

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED