கடலினும் பெரிது

நன்றி சொல்லுவோம்!


நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், 
பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, 
பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.
யாக்கோபு 1:4

"சிக்கலிலும், சிக்னலிலும் சிறிது பொறுமையாய் இருந்தால் போதும், 
வழி தானாக கிடைத்துவிடும்" என்கிறது புதுக்கவிதை. 
பொறுமை என்றுமே நம்மை வெறுமைப்படுத்துவதில்லை; 
மாறாக முழுமையும், நிறைவும் உடையவர்களாய் மாற்றும்.

வாகனத்தில்,வார்த்தையில், வாழ்க்கையில் எங்கும் 
நாம் பொறுமையுடையவர்களாக இருக்க முயற்சித்துப் பயிற்சிப்போம்.
 நம்மிடம் மிகுந்த பொறுமையாக இருக்கும் ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்; ஆண்டவரிடமே பொறுமையை வேண்டி நாமும் பெற்றுக்கொள்வோம்.

P.C.: Google Images


Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED