விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும்
அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி,
உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.
II கொரிந்தியர் 9:10
கருணையே உருவான இறைவன்,
தான் படைத்த அனைத்து உயிர்களுக்கும் உணவளிக்கிறார்!
பிறருக்கு உதவுவோருக்கு உதவுகிறார்,
நன்மை செய்வோருக்கு நன்மைகளை செய்கிறார்.
மனிதர் ஒவ்வொருவரின் விதைப்புக்கேற்ற விளைச்சலையும்
அவரே அருளுகிறார்.
கதிரவன் தன் கரங்களை விரிக்கும் முன்னரே
கருணையாம் கடவுள் உலகிற்கு உணவளிக்கிறார்;
உழவுத்தொழில் செய்வோர் மூலமாய் நம்மிடம் சேர்க்கிறார்.
உழவரைப்போல, பிறர் நன்மைக்கான நமது உழைப்பு பெருகினால்,
இறை உள்ளம் உவகையில் மகிழும்; எங்கும் நன்மைகளே பொங்கும்.
நமது நற்செயல்கள், உழவரைப்போல உன்னதமாகவும், மஞ்சள்போல மங்களமாகவும், கரும்பைப்போல இனிப்பாகவும் இருக்கட்டும்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

Amen
ReplyDeleteபொங்கல் நல்வாழ்த்துகள்
ReplyDeleteHappy Pongal
ReplyDeleteGod Bless
DeleteAmen.......
ReplyDeleteHappy pongal🌟🌟🌟
God Bless
Delete