தேவன்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய
ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு,
மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும்
மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.
ஆதியாகமம் 22:2
அகவை நூறில் ஆபிரகாமுக்கு கிடைத்த அற்புத வாரிசு ஈசாக்கு.
'இந்த ஈசாக்க்கின் மூலமே ஆபிரகாமின் சந்ததி பெருகும்' என வாக்குரைத்த
ஆண்டவர், திடீரென ஈசாக்கையே தகன பலியாக - தனக்கு பலியாக்க
ஆபிரகாமுக்கு கட்டளையிடுகிறார், ஆபிரகாமும் கேள்வியின்றி கீழ்படிகிறார்.
'ஆண்டவரா? அருந்தவப்புதல்வனா?'
ஆபிரகாமுக்கு நடந்த கடுமையான பரீட்சை இது. இதில் ஆபிரகாம்,
ஆண்டவருக்கு அஞ்சி அடிபணிந்தார், ஈசாக்கும் தந்தைக்கு ஒத்துழைத்தார்
இதனால், பரிட்சையில் ஈசாக்கு பலியாகவில்லை;
மாறாக, ஆபிரகாமுக்கோ பதக்கமும்,
அள்ளிசுமக்க அநேக ஆசீர்களும் கிடைத்தது.
தேர்வுகளில் தேவனே முதன்மையாயிருந்தால்
பரீட்சை எல்லாவற்றிலும் பதக்கம் தான்.

Amen
ReplyDeleteGod Bless
Delete