சிறுமையில் சிலாக்கியம்


லேயாள்: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்.
ஆதியாகமம் 29:32

கட்டிய கணவனாலே அற்பமாக எண்ணப்பட்டு, 
புறக்கணிக்கப்பட்ட லேயாளை கர்த்தர் கண்டு, 
அவளுக்கு மகப்பேறு அருளி ஆசீர்வதித்ததால், 
தாழ்வாக நடத்தப்பட்டவள் தாயாக உயர்த்தப்பட்டாள்; 
 பரிதாபத்திற்குரியவள் பாக்கியவதியானாள். 

கணவனால் சிறுமைப்படுத்தப்பட்ட லேயாள், இறைவனால் சிலாக்கியம் பெற்றாள். இதுபோல, மனிதரால் சிறுமைப்படுத்தப்பட்டு 
அற்பமாக எண்ணப்படுவோரெல்லாம், ஆண்டவரால் அற்புதமாக 
உயர்த்தப்படுவர் என்பதே காரியத்தின் கடைத்தொகை.


சிறுமைப்படும்போதெல்லாம் சிலுவையையே நோக்கினால்,
சிகரம்தொடும் சிலாக்கியம் பெறுவோம்.


P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED