யோசேப்பு: நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்;
தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே,
வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு,
அதை நன்மையாக முடியப்பண்ணினார்.
ஆதியாகமம் 50:20
யோசேப்பின் உயிரைக்குடிக்க உடன்பிறப்புகள் துடிக்க,
உன்னத தேவனோ உயரத்திலும் உயரமாய் யோசேப்பை உயர்த்தினார்.
அற்பப்பணத்துக்கு விற்கப்பட்பட்டாலும்,
ஆண்டவரால் அதிபதியாக்கப்பட்டார்.
அதிபதியானாலும், தன்னை விற்றுப்போட்டவர்களை பழிவாங்கவில்லை;
மாறாக, பசியாற்றிப் பராமரித்தார்!
யோசேப்பைக் குழிக்குள் தூக்கிப்போட்டார்கள்,
முடிவில் அவரே குடிகளுக்கெல்லாம் படிஅளக்கிறார்.
சகோதரர்கள் தீமைதான் செய்தார்கள்,
சர்வவல்லமையுள்ளவரோ தீமையையும் நன்மையாக மாற்றினார்.
ஆகவே, உண்மை ஒன்றுதான்:
"நோக்கம் நமதானாலும், ஆக்கம் ஆண்டவருடையதே"!
சர்வ வல்லவர் நம் சொந்தமானால்,
தீதும் நன்றாகும், பாலையும் பயிராகும்/சோலையாகும்.
Amen........
ReplyDeleteBlessings Upon U
DeleteBlessings Upon U Ramya
ReplyDeleteBlessings Upon U
ReplyDelete