இஸ்ரவேல் மக்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு,
கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும்,
இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும்
அவர்களுக்கு முன் சென்றார்.
யாத்திராகமம் 13:21
பாதயாத்திரை தான்;
ஆனாலும், இஸ்ரவேல் மக்களுக்கு பாரமாயிருக்கவில்லை.
ஏனென்றால், பாடுபட்ட வாழ்விலிருந்து பரம விடுதலை!
வழிக்குத் தேவையான எல்லா பொருளும் கிடைத்தது;
வனாந்திரம் முழுக்க இறைவனின் வழிநடத்துதலும் இருந்தது.
வனாந்திர பயணத்தில்
வெயிலுக்கு நிழலாகவும், இருட்டுக்கு வெளிச்சமாகவும் இருந்து
அந்த மக்களை ஆண்டவர் வழிநடத்தினார்!
இப்படி, தேவையான நேரத்தில் தேவைகளை தீர்த்திட்ட தேவன் தாமே,
நமது வாழ்வின் வனாந்திரமோ-வயல்வெளியோ,
எதிலும் நம்மை தொடர்ந்து வழிநடத்திட மன்றாடுவோம்!!
வாழ்வளிக்கும் தேவனே நமது வழித்துணையாகி வழிநடத்தினால்,
வாழ்வு முழுக்க வளமாகும்!!!

Amen
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Aras Annan
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Vinoth
DeleteAmen........
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteBlessings Upon U Ramya
ReplyDelete