பாதகனுக்கு சாதகமாக

உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை 
சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், 
அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? 
அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக.
யாத்திராகமம் 23:5

தம்மை தீட்டாய்ப்பார்க்கும் யூதனுக்கு 'நல்ல சமாரியன்' 
இதைத்தான் செய்தார். பகைவர் என்றவுடன் பார்த்துவிட்டு பக்கவழியாய் 
செல்லவில்லை, பகைமறந்து உதவினார் - உயிரையே காப்பாற்றினார். 
பகைமறந்து உதவியதாலே, இன்று பாரெங்கும் பகிரங்கமாய் கொண்டாடப்படுகிறார்.

'உதவும் உள்ளங்கள் உயர்ந்தது; 
பகைவருக்கு உதவிடும் உள்ளங்களோ ஒப்பற்றது'. 
உதவி தேவைப்படுவோர் பகைவராயினும் 
பகைமறந்து உதவுதல் இரும்பு மனங்களையும் இளகச் செய்யும்;
இருவரும் இணைந்திட வழியும் செய்யும். 
எனவே, திருந்தி இணைத்திட வழியிருந்தால் வருந்தி உதவுவதும் தவறல்ல. 


பகைவருக்கு உதவிடும்போது அவலம் நேரிடலாம். - ஆனால்,  
நமது அன்பு, அவலத்தை மட்டுமல்ல அகிலத்தையும் ஜெயிக்கும்.

P.C.: Google Images

Comments

  1. இவ்வாறு உதவுவது நன்று
    ஆமென்

    ReplyDelete
    Replies
    1. ஆமென்.
      இறையாசீர் நம்மை தொடந்து நடத்தட்டும்.

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED