ஒருவருக்கொருவர் . . .

மிரியாமும் ஆரோனும் மோசேக்கு விரோதமாய்ப் பேசி: 
கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம் பேசினாரோ, 
எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள்.
கர்த்தர் அதைக் கேட்டார்.
எண்ணாகமம் 12:1,2

ஒரே குடும்பத்துக்குள் 'நீயா? நானா?' பிரிவினைக்கு துவக்கமாக, 
மிரியாமும் ஆரோனும் மோசேக்கு விரோதமாகப் பேசினார்கள். 
அவர்கள் பேசியதை மோசே கண்டுகொள்ளவில்லை, 
ஆனால், கர்த்தர் கடிந்துகொண்டார்; 
தவறிழைத்தவர்களை உடனடியாக தண்டித்தார்.

கிறிஸ்துவின் கீழ் ஒரே சரீரமாகிய நமக்குள்ளும் 
பிரிவும் பேதமையும் குறைவல்ல. 
அவயவங்கள் தானாக தன்தன் இஷ்டப்படி செய்தாலோ,
தன்னைத்தான் உயர்த்திக்கொள்ள நினைத்தாலோ, 
ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டாலோ, 'கஷ்டம் சரீரத்திற்கு தான்'.


கிறிஸ்துவே முதன்மையாகவும் - மையமாகவும் இருந்தால், 
நாம் முட்டிக்கொள்ள வேலையே இல்லை.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED