மாயமோ மந்திரமோ

யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, 
இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை;
எண்ணாகமம் 23:23

கர்த்தர் இஸ்ரவேல் மக்களோடு இருந்ததால், 
அவர்களில் குற்றமும் இல்லை, அக்கிரமும் இல்லை. 
ஆதலால், எதிரிகளின் மந்திரங்களும், தந்திரங்களும் தவிடுபொடியானது,
 எதிராக எய்யப்பட்ட அம்புகள் எல்லாம் அம்பேலானது.

தம்மை தேடும் மக்களை ஆண்டவர் என்றும் தனியே தவிக்கவிடுவதில்லை.
 அவர்தம் மக்களோடு ஆண்டவர் இருப்பதால், 
தீமைக்கு அங்கு வேலை இல்லை. 
மக்களுக்கு எதிரான மாயமோ, மந்திரமோ, தந்திரமோ 
எந்த நெருக்குதலும் நொறுக்கப்படும், தாக்குதல்கள் தகர்க்கப்படும்.


கர்த்தர் நம் பக்கத்தில் இருக்கும்பொழுது, 
நமக்கு எதிராக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்.


P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED