அருள் ஒளி



வழியில் பார்த்த ஒளியின் வசீகரம்!


வீசுற இந்த வெளிச்சம் விடியல் வரைதான்,
விடியல் ஒளியோ சாயுங்காலம் வரைதான்!

ஒளிவு மறைவு தானா ஒளியின் சூட்சுமம்?

இல்லை. . . . !


மறைவற்ற மாசற்ற ஒளியுண்டு - அது
நித்திய வழிகாட்டும் சத்திய ஒளி!


தேடுவோர்க்கெல்லாம் தென்படும் இவ்வொளி
பழி நீக்கும், பிணி போக்கும்
பாவம் தீர்க்கும், புண்ணிய நாதரிடம் சேர்க்கும்!

Comments

  1. ஒளிந்திடாது, ஒழிந்திடாது
    ஒளியினிடம் வருவோம்
    ஒளிர்ந்திடுவோம்

    அருமை தம்பி ...

    தொடர்ந்து ஒளிரட்டும் உங்கள் எழுத்துப்பணி.

    ReplyDelete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED