நம்ம யோனா

யோனா: நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; 
அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; 
என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு 
உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.
யோனா 1:12

ஆண்டவர் போகச்சொன்ன இடத்திற்கு போகாமல், 
தன் மனம்போன போக்கில் தப்பியோட நினைத்த "யோனா" 
வழிமாறி கப்பலில் பயணித்தான், கடலே கொந்தளித்தது. 
"யோனா"வைத் தூக்கி கடலிலே போடும்வரை 
கடல் கொடூரமாக கொந்தளித்தது, போட்டவுடன் அமர்ந்தது.

மனம்போன போக்கில் திரியும் "யோனா"க்கள் நமக்குள்ளும் இருக்கிறார்கள்; 
அவர்களின் தேவையில்லாத காரியங்கள், 
நமக்குக் கொந்தளிப்பையும் கொண்டுவரும். 
வழிதப்பும் "யோனா"க்களைத் தூக்கிப்போடுவது தான் தீர்வு என்றால், 
யோசிக்காமல் தூக்கிவீசுவது தான் சிக்கல்களைத் தீர்க்கும்.

P.C.: Google Images

யோனா வின் முழுக்கதையை சுருக்கமாகப் படிக்க . . 

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED