இறை பிரியமும், இனிய வாழ்வும்

ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால்,
அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
நீதிமொழிகள் 16:7

ஒருவன் ஆண்டவருக்குப் பிரியமாக நடந்தால், 
அவனுக்குமா பகைவர்கள் இருப்பார்கள்? நிச்சயம் இருப்பார்கள். 
ஏனெனில், கர்த்தருக்குப் பிரியமாக, நல்லவனாக வாழ்வது முடியும்; 
ஆனால்,எல்லோருக்கும் நல்லவனாக ஒருவானாலும் வாழ முடியாதல்லவா!

நமது வழிகள், மனிதரைப் பிரியப்படுத்துவதா அல்லது கர்த்தரைப் பிரியப்படுத்துவதா? கர்த்தரைத் தான் பிரியப்படுத்தவேண்டும். 
கர்த்தரேப் பிரியமாய் இருக்கும் நம்மிடம், நிச்சயம் மனிதர்களும் பிரியமாவார்கள்.
பகையெல்லாம் புகையாய் மறையும், சமாதானமும் சாந்தமும் நிறையும்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED